பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்
மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்கள் மீது பாலியல் தாக்குதல்.
இளைஞர் கைது.
பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்கள் இருவர் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நிற்கும் வரிசை பல மைல் தூரத்திற்கு நீண்டுகொண்டே செல்கிறது.
எப்படியாவது தங்கள் அன்பிற்குரிய மகாராணியின் உடலை கடைசியாக ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று மணிக்கணக்காக, ஏன் நாள்கணக்கில் கூட காவல் கிடக்கிறார்கள் மக்கள்.
அப்படி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இடத்தில் கூட ஒரு இளைஞர், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீண்ட நேரமாக வரிசையில் நின்ற ஒரு பெண் மீது, அவருக்கு பின்னால் நின்ற நபர் இடித்துக்கொண்டே நின்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திரும்பிப் பார்க்க, இடுப்புக்குக் கீழே சரியாக உடையணியாமல் நின்ற ஒரு இளைஞர் தன்னிடம் ஆபாசமாக நடக்க முயல்வதைக் கவனித்துள்ளார் அந்தப் பெண்.
அவர் தன் சகோதரியிடம் இரகசியமாக விடயத்தைத் தெரிவிக்க, அவர் பக்கத்தில் உள்ளவர்களிடம் அமைதியாக விடயத்தைக் கூற, அவர்கள் சற்று இடம் விட்டு விலகி, அந்த இளைஞருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இடைவெளி இருக்கும் வகையில் தள்ளி நிற்க, அங்கிருந்து நகர்ந்த அந்த இளைஞர், வேறொரு பெண்ணின் பின்னால் போய் நின்றுகொண்டு அவரிடமும் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.
Picture: AFP
உடனே மக்கள் சத்தமிட, பொலிசார் அங்கு ஓடிவந்துள்ளார்கள்.
உடனே அந்த இளைஞர் தனது மொபைலை தேம்ஸ் நதிக்குள் வீசிவிட்டு தண்ணீருக்குள் குதித்திருக்கிறார். பின்னர் சற்று தொலைவில் அவர் தண்ணீரிலிருந்து வெளியேற முயல, தயாராக காத்திருந்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் Adio Adeshine என தெரியவந்துள்ளது.
அவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.