யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு
youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப்பில் உயர்த்தப்பட்ட தகுதி வரம்பு
யூடியூப் தளம் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

இதில் வருமானம் பெறுவதற்கான தகுதி வரம்பாக 1000 சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.
மேலும், வீடியோக்களுக்கு 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பு உள்ளது.
தற்போது, அதனை 2 மடங்காக உயர்த்தி 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் 20 மில்லியன் பார்வைகள் என தகுதி வரம்பை உயர்த்தி உள்ளது.
அதேவேளையில், 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த புதிய தகுதி வரம்பு, பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.
இது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட தகுதி பெறுவதில் பாரிய சிக்கலாக அமையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |