மனைவி மீது அவதூறு பரப்பியதாக புகார்.., பிரபல யூடியூபர் கைது
மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல யூடியூபரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் விஷ்ணு, பிரபல ஒப்பனை கலைஞர் அஸ்மிதாவை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2022ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது.
ஆன்லைன் மோசடி, நண்பரின் தங்கைக்கு தவறாக மெசேஜ் அனுப்பியது உள்ளிட்ட புகார்களுக்குள் சிக்கிய விஷ்ணுவை விட்டு அஸ்மிதா பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், விஷ்ணு தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அஸ்மிதா புகாரளித்தார்.
அஸ்மிதா அளித்த புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |