இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அதிரடி கைது! வெளியான முழு விபரம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில், நேரலை நிகழ்வு ஒன்றில் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது, ஆட்சேபனைக் கூறிய கருத்தை தெரிவித்ததால் அவரை Hansi பொலிசார் கைது செய்துள்ளனர்.
அதன் பின் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. Hansi சேர்ந்த Rajat Kalsan என்பவர் IPC மற்றும் SC/ST சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங் மீது புகார் கொடுக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி விசாரணை நடந்த நிலையில், யுவராஜ் சிங் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளதாக Hansi எஸ்.பி. நிட்டிக்கா கூறியுள்ளார்.
யுவராஜ் சிங் மீது, 153A பிரிவின் கீழ் (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையிலும், பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும்153B பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் நேரலையின் போது யுவராஜ் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்ததாக Rajat Kalsan என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், யுவராஜ் சிங் இந்த வழக்கில் தான் குற்றமற்றவர் என்று கூறி, எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.