ஒரே நாட்டில் 300 விக்கெட்கள் - யாரும் செய்யாத சாதனை படைத்த சஹால்
T20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையையுவேந்திர சஹால் படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் முதல் தோல்வி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து, 222 ஓட்டங்கள் குவித்தது.
223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் குவித்தது. +

இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
முதல் தோல்வியை பெற்றாலும், பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
சஹால் சாதனை
இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுவேந்திர சஹால், 4 ஓவர்கள் வீசி 36 விக்கெட்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவில் நடைபெற்ற T20 போட்டிகளில் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

T20 கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் 300 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை யுவேந்திர சஹால் படைத்துள்ளார்.
யுவேந்திர சஹால், இந்தியாவில் 267 T20 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய வீரர் பியூஸ் சாவ்லா, இந்தியாவில் 265 T20 போட்டிகளில் விளையாடி 289 விக்கெட்களை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் டேனி பிரிக்ஸ் 288 விக்கெட்களுடன் 3வது இடத்திலும், புவனேஷ்வர் குமார் 276 விக்கெட்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |