விளையாடுவாரா ? மாட்டாரா ? அதிரடி மன்னன் ஹார்திக் பாண்டியா குறித்து மும்பை அணி வெளியிட்ட முக்கிய தகவல்!
அதிரடி மன்னன் ஹார்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர் ஜாசிர் கான் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணி விளையாடடிய இரண்டு போட்டியிலும் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை.
பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் இதுபற்றி மும்பை அணி தரப்பிலிருந்து அறிவிப்பு எதுவும் வராமல் இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர் ஜாகிர் கான், ஹார்திக் பாண்டியா உடல்நிலை குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஹார்திக் பாண்டியா பயிற்சியை தொடங்கிவிட்டார். நாளை நடக்கவிருக்கும் போட்டியில் விளையாட அவர் உடற்தகுதியுடன் இருப்பார் என நம்புவதாக ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
நாளை செப்டம்பர் 26ம் திகதி இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெறவிருக்கும் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரோகிர் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.