கர்நாடகாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்! தடுப்பது எப்படி?
தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன இதனை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
எப்போது பரவத் தொடங்கியது?
2015-ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் பரவத் தொடங்கிய ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இதை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆனால், பின்னர் அதனை நீக்கிவிட்டனர்.
ஜிகா வைரஸ் என்றால் என்ன?
இந்த தொற்று நோய் ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இனங்கள் வழியாக பரவுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எப்படி பரவுகின்றது?
ஜிகா வைரஸ் என்பது கொசு மூலம் பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் தான் இந்த பாதிப்பு மனிதர்களுக்கு பரவுகிறது.
ஜிகா வைரஸ் பாதிப்பு என்பது பெரும்பாலானவர்களுக்கு தீவிரமான பிரச்சனையாக மாறுவது கிடையாது. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும்பட்சத்தில் அது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜிகா வைரஸின் மிகவும் பொதுவான அறிகுறிகள்
- காய்ச்சல்
- சொறி
- மூட்டு வலி
- வீக்கமடைந்த கண்கள்
- உடல் வலி
- தலைவலி
தொற்றுநோயைத் தடுப்பது எப்படி?
- தொற்று பரவும் நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.
- நீண்ட கை மற்றும் முழு நீள பேன்ட் அணியவும்
- வீட்டுக்குள்ளேயே இருங்கள்
- பாதுகாப்பான கொசு ஸ்ப்ரே மற்றும் கொசு விரட்டி லோஷன்களைப் பயன்படுத்தவும்
இரத்த பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை மூலம் மட்டுமே ஜிகா வைரஸைக் கண்டறிய முடியும். எனவே ஜிகா வைரஸ் அறிகுறி இருந்தாலும், பாதிப்பு இருந்தாலும், ஓய்வு எடுப்பது அவசியம். முடிந்த அளவு வீட்டிலேயே இருப்பது நல்லது.