அம்மாவின் உடல் முழுவதிலும் இரத்தம் கொட்டியது! தந்தையை சிக்க வைத்த சிறுமிகள்... 15 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் நேர்ந்த கதி
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக பிரித்தானிய சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கணவன் விடுதலைக்கு சில நாட்களுக்கு முன்னர் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர் காட்பிரே முசுசா (50). இவர் கடந்த 2005ஆம் ஆண்டு தனது மனைவியை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதாவது, காட்பிரேவின் 11 மற்றும் 7 வயதான இரண்டு மகள்கள் அப்போது நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் தாயாரை காட்பிரே சரமாரியாக குத்தியதை பார்த்தோம்.
வேண்டாம் நிறுத்துங்கள் அப்பா என கூறியும் அவர் நிறுத்தவில்லை. கூரான ஆயுதத்தால் உடல் முழுவதும் குத்தியதில் என் தாயின் உடல் முழுவதிலும் இருந்து இரத்தம் கொட்டியது.
தாயார் இறந்த பின்னர் காட்பிரே அங்கிருந்து ஓடிவிட்டார் என கூறினார். காட்பிரேவின் மனைவி தனது காதலனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்த ஆத்திரத்தில் தான் அவர் இந்த கொலையை செய்தார் என தெரியவந்தது.
இந்த வழக்கில் காட்பிரேவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் 2005ல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சில தினங்களில் காட்பிரே விடுதலை ஆகவிருந்த நிலையில் அவர் சிறையிலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஏதோ ஒரு வியாதி காரணமாக அவர் இறந்துவிட்டார் என தெரிகிறது. இதனிடையில் அவரின் உடலை சொந்த நாடான ஜிம்பாப்வேவுக்கு எடுத்து செல்ல உதவுமாறு குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி GoFundMe நிதி திரட்டும் பக்கத்தில், காட்பிரேவின் அத்தை முடுக்வா குறிப்பிடுகையில், காட்பிரே கடந்த 3ஆம் திகதி பிரித்தானிய சிறையில் இறந்துவிட்டார்.
அவர் உடலை ஜிம்பாப்வேவுக்கு கொண்டு சொல்ல நிதியுதவி செய்யுங்கள், வரும் 12ஆம் திகதிக்குள் உடலை எடுத்து செல்ல நினைக்கிறோம்.
இதற்காக உங்களுக்கு முன்கூட்டியே நன்றிகள் மற்றும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.