இந்தியாவில் பரவும் Zombie Drug: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ காட்சிகள்
இந்தியாவில் Zombie Drug எனப்படும் பயங்கரமான போதைப்பொருள் பரவி வருவதாக அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் Zombie Drug
பீகார் மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜாம்பி டிரக்(Zombie Drug) எனப்படும் போதைப்பொருள் பரவியுள்ளதாக தெரிகிறது.
பயந்தர் மேற்கு பகுதியில் உள்ள 90 அடி சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில், நபர் ஒருவர் சுயநினைவின்றி அசையாமல் நின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள், சந்தேகத்திற்குரிய நபர் அசையாமல் ஒருவித தியான நிலையில் இருப்பது போல் நின்றதாக அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோவின் உண்மைத்தன்மையை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சந்தேகத்திற்குரிய நபர் பயன்படுத்திய போதைப்பொருள் எது என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Zombie Drug என்பது என்ன?
ஜாம்பி டிரக்(Zombie Drug) என்பது விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் சைலாசின்(Xylazine) என்ற மயக்க மருந்து ஆகும்.
இதனை மனிதர்கள் பயன்படுத்தும் போது கடுமையான சோர்வை உணர்வதுடன் ஜாம்பி போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த ஜாம்பி டிரக்(Zombie Drug) பயன்படுத்தும் போது சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவதோடு, இதயத் துடிப்பும் மிக மெதுவாக மாறுவதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |