சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் அளித்த ரகசிய தகவல்: இருவரைக் கைது செய்த பொலிசார்: அதிரவைத்த கண்டுபிடிப்பு
போதைப்பொருள் சட்டத்தை மீறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சுவிஸ் எல்லைப் பாதுகாவலர்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில், பொலிசார் இருவரை கைது செய்தார்கள்.
அதிரவைத்த கண்டுபிடிப்பு
பொலிசார் அவர்களை விசாரணைக்குட்படுத்த, கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த இருவரும் கொடுத்த தகவலின்பேரில், சூரிச்சிலுள்ள Rafz என்னும் நகரில் அமைந்துள்ள பெரிய கட்டிடம் ஒன்றை பொலிசார் சோதனையிட்டார்கள்.
(c) Kapo ZH
சோதனையின்போது, அந்த கட்டிடத்துக்குள், 5,000 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவது தெரியவந்தது.
முறையே 47 மற்றும் 51 வயதான அந்த இருவரையும் கைது செய்த பொலிசார், அந்த கட்டிடத்தில் வளர்க்கப்பட்டுவந்த கஞ்சா செடிகளையும் அழித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |