இந்தூரில் 2வது இடத்தில் நோட்டா: காங்கிரஸ் பிரச்சாரத்தால் விழுந்த 1.9 லட்சம் வாக்குகள்
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டா 2வது இடம் பிடித்து இருப்பது இந்திய தேர்தலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி
இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் விறுவிறுப்புடன் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்ப்பில் களமிறக்கப்பட்ட அக்ஷப் காண்டி பாம் தனது வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றார்.
இது காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மாற்று வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது, ஆனால் அதனை செய்ய காங்கிரஸ் தயங்கியது.
2வது இடம் பிடித்த நோட்டா
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தங்களுக்கான வாக்கினை நோட்டாவுக்கு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டா 1,92,689 வாக்குகளுடன் 2வது இடம் பிடித்துள்ளது.
72 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது இதுவே முதல் முறையாகும்.
அதே சமயம் பாஜக வேட்பாளர் சிட்டிங் எம் பி ஷங்கர் லால்வானி 10,88,311 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |