ஒரு வயது குழந்தை பிரித்தானியாவை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு: அதிர்ச்சியில் பெற்றோர்
பிரித்தானியாவில் பிறந்த ஒரு வயது குழந்தை ஒன்றை, உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு உள்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ள செய்தி அந்தக் குழந்தையின் பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஒரு வயது குழந்தை பிரித்தானியாவை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் ஜோர்டான் நாட்டவரான முகம்மதுவின் மகளான மாசா (Massah, 13 Months), கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் பிறந்தாள். ஆனால், மாசா உடனடியாக பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம் ஒன்று தெரிவிக்கிறது.
அதற்குக் காரணம், ஜனவரி மாதம், முகம்மது குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா சென்று திரும்பியதுதான். உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் ஏற்படும் தாக்கத்தைவிட, புலம்பெயர்தல் விதிகளின் ஒழுங்குமுறையை பராமரிப்பது அவசியம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதகமான சூழல்
ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்னும் பதற்றமான சூழல் காணப்படுவதால், முகம்மதுவின் குடும்பம் இப்போது அங்கு செல்ல விரும்பவில்லை. அப்படியே தாங்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மீண்டும் விசாவுக்கு விண்ணப்பித்தாலும், அவர்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயமும் உள்ளது.
நாளை, என் பிள்ளை வளர்ந்துவரும்போது, நீ பிறந்த நாடாகிய பிரித்தானியா, உனக்கு ஒரு வயதே இருக்கும்போது உன்னை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னது என்னும் கதையை நான் அவளுக்கு எப்படிச் சொல்லப்போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் முகம்மது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |