அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல்! தெற்கு உக்ரேனிய பகுதியில் 10 பேர் பலி
உக்ரைனின் தெற்கு பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைன் பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், உக்ரைனின் பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்யா கூறியது.
இந்த நிலையில், தெற்கு உக்ரைன் பகுதியான ஒடெசாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கருங்கடலில் இருந்து மூலோபாய விமானத்தின் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டிருப்பதாக தோன்றுவதாக ஒடெசா இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி பிராட்சுக் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்கியதாகவும், அதில் பலியானவர்களின் என்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
PC: REUTERS/Alexander Ermochenko
முன்னதாக இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக கூறப்பட்டது. இரவு வேளையில் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
PC: REUTERS/Alexander Ermochenko