பேய்மழை... பெருவெள்ளம்: மொத்தமாக அழிந்துவிடும் என 10 முறை கணிக்கப்பட்ட உலகம்
நெருப்பு, பெருவெள்ளம் என பல்வேறு இயற்கை பேரிடரால் உலகம் மொத்தமாக அழிந்துவிடும் என இதுவரை 10 முறை கணிக்கப்பட்டிருந்தும், அது அனைத்தும் பொய்யாகியுள்ளது.
பூமி மொத்தம் வெள்ளத்தில்
உலகம் அழிந்துவிடும் என பட்டியலிடப்பட்ட 10 சம்பவங்களில் முதலாவதாக கடந்த 2012ல் மாயன் காலண்டர் அதன் முதல் சுழற்சியை நிறைவு செய்தது. டிசம்பர் 21ம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் உலகம் அழிந்துவிடும் என கணிப்புகள் வெளியானது.
பெயர் குறிப்பிடாத கோள் ஒன்று பூமியில் மோதும் என்றும், இதனால் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழிந்துவிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது பொய்யானது. Harold Camping என்பவர் விவிலியத்தை குறிப்பிட்டு உலகம் அழியப்போவதாக தமது கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
1994ல் உலகம் அழிந்துவிடும் என 1992ல் Harold Camping பதிவிட்டிருந்தார். மேலும், விலியத்தில் கூறப்பட்டுள்ள பூமி மொத்தம் வெள்ளத்தில் மூழ்கிய நிகழ்வின் 7,000 ஆண்டுகள் நிறைவையொட்டி 2011 மே மாதம் 21ம் திகதி அது போன்றதொரு பெருவெள்ளத்திற்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார், ஆனால் அவர் கணிப்புகள் எதுவும் நிறைவேறவில்லை.
1988ல் True Way அமைப்பின் தலைவரான Hon-Ming Chen கடவுள் நேரடியாக தோன்றும் காலம் இது என்று அறிவித்தார். 1989ல் ஒரு பெருவெள்ளத்தால் மொத்த உலகமும் அழியப்போகிறது என அறிவித்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் மட்டும் அச்சம் கொண்டனர், அவரது கணிப்புகள் பொய்யானது.
1910ல் ஹாலி வால் நட்சத்திரம் பூமியை நெருங்கியது. இது பூமியில் அழிவை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கணித்தனர். ஆனால் மக்கள் பீதியடைந்தது போன்று எதுவும் நடக்கவில்லை.
13,000 குடியிருப்புகள் தீக்கிரை
1843ல் ஏசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை நடக்கவிருக்கிறது என William Miller தமது ஆதரவாளர்களை நம்ப வைத்தார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, இருப்பினும் 1844ல் கட்டாயம் நடக்கும் என்றார். அப்போதும் நடக்கவில்லை.
1813ல் Joanna Southcott என்பவர் தமது 65வது வயதில் இரண்டாவது கடவுளை பெற்றெடுப்பேன் என்றார். அவரது 42வது வயதில் அதுவரை திருமணம் செய்துகொள்ளாத அவர் இந்த கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் அவரது கணிப்பு நிறைவேறும் முன்னரே அவர் மரணமடைந்தார்.
1666ல் உலகம் அழிந்துவிடும் என பல ஐரோப்பியர்கள் நம்பினார்கள். அத்துடன் லண்டனில் பெரும் தீ விபத்தும் ஏற்பட, மக்கள் உலகம் அழியப்போகிறது என்றே நம்பினார்கள்.
லண்டன் பெரும் தீ விபத்தில் 87 தேவாலயங்களும் 13,000 குடியிருப்புகளும் தீக்கிரையானது. ஆனால் வியப்பளிக்கும் வகையில், 10 பேர்கள் மட்டுமே மரணமடைந்தனர்.
1524ல் ஜேர்மன் கணிதவியலாளரும் ஜோதிடருமான Johannes Stoffler அந்த ஆண்டு பிப்ரவரி 25ல் உலகளாவிய பெருவெள்ளம் ஏற்படும் என்றார். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |