நாடு திரும்பிய 100 டன் தங்கம்! இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் இங்கிலாந்துக்கு சென்றது ஏன்?
இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 100 டன் தங்கமானது, அங்கு ஏன் சென்றது என்பது குறித்த காரணத்தை பார்க்கலாம்.
இந்தியா வந்தடைந்த 100 டன் தங்கம்
இந்தியா உள்பட பல உலக நாடுகள் தங்கள் நாடுகளுடைய தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் ( Bank of England) சேமித்து வைத்துள்ளனர்.இந்த பழக்கமானது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உள்ளது.
ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் 308 டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு 100.28 டன் தங்கம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இந்தியாவுக்கு சொந்தமாக 408 டன் தங்கம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு சொந்தமான 413.9 டன் தங்கம் உள்ளது. அந்தவகையில், மொத்தமாக இந்தியாவுக்கு 822 டன் தங்கம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், 2023-24 நிதியாண்டில் 27.46 டன் தங்கத்தை இந்தியா புதிதாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து வங்கிக்கு சென்றது ஏன்?
1990-91 -ம் ஆண்டு அந்நிய செலாவணி நெருக்கடியின் போது தன்னிடமிருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்த இந்தியா, 405 மில்லியன் டொலரை கடனாக பெற்றது.
இதன்பின்னர், இந்த அடமானத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் இந்தியா மீட்டது. ஆனால், வணிக லாபம் மற்றும் போக்குவரத்து காரணங்களால் இந்த தங்கத்தை அங்கேயே வைத்திருந்தது.
இந்நிலையில், சில காரணங்களால் அங்கிருந்த தங்கத்தை இந்தியா மீண்டும் திரும்ப கொண்டு வந்துவிட்டது. இதனால், முக்கியமாக லாக்கர் வாடகை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |