11 பேரை உயிரோடு எரித்து துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரம்! மியான்மரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை ராணுவ வீரர்கள் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. அன்றில் இருந்து இன்று வரை அந்நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து ராணுவ வீரர்கள் இதுவரை 1,300 மேற்பட்ட அப்பாவி மக்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்நிலையில் மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள Monywa நகரில் அணிவகுத்து சென்ற ராணுவ வாகனங்கள் மீது மக்கள் சிலர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் ராணுவ அதிகாரிகள் கோவத்தில் பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கிராம மக்கள் 11 நபரை உயிரோடு எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடூர சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது ராணுவ வாகனம் மோதி 3 பேரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
.