பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்
பிரித்தானியாவின் சவுத் யார்க்ஷயர் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவனை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணாமல் போன சிறுவன்
சவுத் யார்க்ஷயரின் மெக்ஸ்பரோவில் பகுதியின் பெர்ரி போட் லேன் அருகே டான் ஆற்றில் குரித்த மெக்கன்சி ஸ்விஃப்ட் என்ற 11 வயது சிறுவன் சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு மீட்பு படையினர், நீருக்கடியில் தேடும் சிறப்பு படையினர் மற்றும் பொலிஸார் என தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சிறுவன் கடைசியாக குதித்த இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் அவர் விட்டுச் சென்ற பொருட்கள் மற்றும் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சிறுவன் இதுவரை ஆற்றில் இருந்து வெளியேற வில்லை என்றால், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சவுத் யார்க்ஷயர் காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்துள்ளனர்.

பயங்கரமான வெப்ப அலைகள் காரணமாக நாட்டின் நீர்நிலைகளில் இளைப்பாற கூடி நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் நீரில் தாங்களாக இறங்கி சிறுவனை தேட வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |