மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: பிரபலங்களுக்கு பறந்த அழைப்பு
மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி தமிழ் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
மலேசியாவில் 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழறிஞர்கள் பலர் மேற்கொண்ட முயற்சியால் கடந்த 1964ம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உருவாக்கப்பட்டது.
இந்த மன்றத்தில் தமிழறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகம் அறியச் செய்யும் விதமாக உலகத்தமிழ் மாநாடு நடத்துவார்கள்.
இந்த மாநாட்டில் தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் உள்பட பல தலைப்புகள் தமிழ் வல்லுநர்கள் உரையாற்றுவார்கள்.
பிரபலங்களுக்கு அழைப்பு
மேலும், இந்த மாநாட்டில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெறும்.
மலேசியாவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு உலகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும், இந்தியாவில் உள்ள மத்திய அமைச்சர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |