ஐரோப்பாவில் 12 வயதினருக்கு தடுப்பூசி போட அனுமதி கொடுங்க! விண்ணப்பித்த்துள்ள பிரபல நிறுவனம்
ஐரோப்பாவில் 12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இந்த நிறுவனங்களின் தடுப்பூசி ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவில் தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் பைசர் நிறுவனமும், பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் மட்டுமின்றி, அமெரிக்காவிலும் இதே வயதுடையவர்களுக்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், உலக அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.