அந்தரத்தில் பறந்துக்கொண்டிந்த விமானம் திடீரென தரையில் விழுந்து சிதறிய பயங்கரம்... 12 பேர் பலி
மியான்மரில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை Mandalay நகரில் உள்ள Anisakan கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானத்தில் மொத்தம் 16 பேர் பயணித்த நிலையில், அதில் 12 பேர் பலியானதாகவும், 4 காயங்களுடன் உயிர்தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறித்த விமானத்தில் மூத்த இராணுவ அதிகாரி பயணித்ததாக கூறப்படுகிறது.
விபத்தை அடுத்து சம்பவத்திற்கு விரைந்து Mandalay நகர தீயணைப்பு துறையினர் மீட்பு பயணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானம் எப்படி எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
ஆனால், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், சம்பவம் குறித்து மியான்மர் விமானப்படை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.