ஸ்பெயினில் அதிகரிக்கும் குரங்கம்மை பாதிப்பு!
ஸ்பெயினில் மேலும் 12 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் உலகம் முழுவதும் 23 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த நிலையில் ஸ்பெயினில் மேலும் 12 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நோயாளிகள் அனைவரும் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Representative Image
இதன்மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தை தொடர்ந்து அதிகளவில் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது.
Photo Credit: Reuters