பாசத்திற்கு கிடைத்த வெற்றி! தந்தைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 12 வயது சிறுவன்! உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள வழக்கு..
நெதர்லாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நீதிமன்றம் வரை சென்று போராடி உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி பெற்று, தந்தைக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளான்.
உலகத் தலைவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக விரைவில் தடுப்பூசி போட மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்த ஒரு நாட்டிலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி நேரடி போட அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நீதிமன்றம் வரை சென்று போராடி, தனக்கு உடனடியாக கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடலாம் என்று தீர்ப்பை பெற்று வெற்றி பெற்றுள்ளான்.
டச்சு நகரமான க்ரோனிங்கனைச் (Groningen) சேர்ந்தவர் அந்த சிறுவன். அந்நாட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்கு 12 முதல் 17 வயதுடையவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசியைப் பெற பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
IMAGE: AP (representative)
அந்த சிறுவனின் பாட்டி, மெட்டாஸ்டேடிக் நுரையீரல் புற்றுநோயால் (metastatic lung cancer) பாதிக்கப்பட்டு, வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அந்த நோய் அவரது உயிரை எப்போது வேண்டுமானாலும் பறிக்கும்.
இந்த நிலையில், சிறுவன் தனது பாட்டியுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட விரும்புகிறார். ஆனால் பாட்டியை சந்திக்க சிறுவன் சென்றபோது மருத்துவமனை அதிகாரிகள் தடுப்பூசி போடவர்கள் மட்டுமே அவரை சந்திக்க முடியம் என கூறினர்.
அதற்காக அந்த சிறுவன் தனது பாட்டியை சந்திக்க கொரோனா தடுப்பூசி போட விரும்பினார். இருப்பினும், அவரது தந்தை தனது மகனுக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டினார், ஏனெனில் அவர் தடுப்பூசிகள் இன்னும் "சோதனை கட்டத்தில்" இருப்பதாக நம்புகிறார் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறார்.
தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு நீண்ட கோவிட் அறிகுறிகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் சிறுவனின் தந்தை கூறினார்.
ஆனால் இப்போது, 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இங்கிலாந்தில் கோவிட் தடுப்பூசி மருந்துகளைப் பெறுகிறார்கள் என்பதால், சிறுவன் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்து, தனது தந்தையின் முடிவை எதிர்த்து ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடிவு செய்தார்.
வழக்குத் தாக்கல் செய்வதற்கான அவரது முடிவை அவரது தாயார் (விவாகரத்து பெற்றவர்) ஆதரித்தார்.
வழக்கு நீதிமன்றத்தை அடைந்தபோது, க்ரோனிங்கன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்ட் ட்ராம்ப் (Bart Tromp) 12 வயதுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
சிறுவனின் எண்ணங்கள் தூய்மையானவை மற்றும் அவரது தந்தையின் தயக்கத்தை விட முக்கியமானது என்பதால் அவர் விரும்பினால் தடுப்பூசி போட வேண்டும் என்றார்.
கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான அவரது தந்தையின் வாதங்களுக்கு அறிவியல் அடிப்படையோ ஆதாரமோ இல்லை என்றும் நீதிபதி கூறினார்.