120 உயிர்களை சூறையாடிய ஐரோப்பா வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் காணவில்லை
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 120 பேர் இறந்தனர் மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், ஆறுகள் கரைகளை உடைத்துக்கொண்டு ஓடின. அதன்பின்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் விளைவாக இப்போது 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் நகரங்களும் கிராமங்களும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன, மேலும் குடியிருப்பாளர்கள் தவிக்கின்றனர். இதில் ஜேர்மனி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் (North Rhine-Westphalia) ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரைன்லேண்ட்-பலட்டினேட்டில் (Rhineland-Palatinate) 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் அஹ்ர்வீலர் (Ahrweiler) பிராந்தியத்தில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை. மொபைல் நெட்வொர்க்குகள் செயலிழந்திருப்பதால் அவர்களின் நிலை பற்றிய தகவல் இன்னும் தெரிவைக்கப்படவில்லை.
700 மக்கள்தொகை கொண்ட ஜேர்மன் கிராமமான ஷூல்டில் (Schuld) அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.