120ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! 42 பேரின் உடல்கள் மீட்பு..தத்தளிக்கும் நகரம்
கென்யாவில் அணை உடைந்தது மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது.
பெருவெள்ளம்
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கனமழை பெய்ததில், தெற்கு நகரமான மை மஹியுவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
அங்கு அணை உடைந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்கள் மீட்பு
மீட்புப்பணி குறித்து பொலிஸார் கூறுகையில், ''கிஜாபே பகுதியில் அணை ஒன்று அதன் கரையில் உடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 17 சிறார் உள்ளடக்கிய 42 பேரின் உடல்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். மேலும், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன'' என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மழையினால் நீர்மின் அணைகள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. இது பாரிய கீழ்நிலை உபரிநீர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என அரசாங்க செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |