மெக்சிகோவில் 8 பேரைக் கொன்ற 14 வயது சிறுவன் கைது
மெக்சிகோவில் 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
14 வயது சிறுவன் கைது
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக "எல் சாபிடோ" என்ற புனைப்பெயர் கொண்ட 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான்.
மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி, சிறுவன் ஜனவரி 22 அன்று பைக்கை ஓட்டிச் சென்று மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான சிமல்ஹுவானில் ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 22 அன்று எட்டு பேரைக் கொன்றது தொடர்பாக மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கும்பலைச் சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
Image Credit: Mexican police
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிக்கொண்டிருந்தனர். கொல்லப்பட்ட 8 பேரைத் தவிர, 5 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகளும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால், மெக்சிகோ அதிகாரிகள் அவரது பெயரை வெளியிடவில்லை. ஆனால் அவரது புனைப்பெயர் "எல் சாபிடோ" அல்லது "லிட்டில் சாப்போ" என்பது, சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மானுடனான அவரது தொடர்பைக் குறிக்கிறது.
இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மெக்ஸிகோவில் போதைப்பொருள் கும்பல்கள் பொதுவாக கடத்தல், ஒப்பந்தக் கொலை, போட்டியாளர்களை தங்கள் பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்கும் அல்லது அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நபர்களைக் கொலை செய்வதில் ஈடுபடுகின்றன.
கடந்த காலங்களில் மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் சிறார்கள் கொலையாளிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
Credit: Norma Jean Gargasz / Alamy Stock Photo

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.