பெற்ற மகளை 3 மாதங்களாக துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை..தலையில் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுமி
பாகிஸ்தானில் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையை 14 வயது மகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியைச் சேர்ந்தவர் பிலால் கான். தையல் தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது 14 வயது மகள் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை தலையிலேயே சுட்டுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிலால் கான் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொடுமையை அனுபவித்த சிறுமி
அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிஸாரிடம் கூறியுள்ளார். தனது தந்தை மூன்று மாதங்களாக பலமுறை தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்ததால் அவரை கொல்ல முடிவெடுத்து துப்பாக்கியால் சுட்டதாகவும் அச்சிறுமி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் விசாரணைக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |