வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலி? அதிகரிக்கும் பதற்றம்
உத்தராகண்ட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது, இதன் தொடர்ச்சியாக தெலலிங்கா ஆற்றில் கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தில் கரையோரம் இருக்கக்கூடிய பொதுமக்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டன, இதில் சிக்கி 100 முதல் 150 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அத்துடன் ரிசி கங்கா மற்றும் தபோவன் நீர்மின் நிலையமும் கடுமையாக சேதமடைந்துள்ளது, இதனால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#WATCH | Water level in Dhauliganga river rises suddenly following avalanche near a power project at Raini village in Tapovan area of Chamoli district. #Uttarakhand pic.twitter.com/syiokujhns
— ANI (@ANI) February 7, 2021