கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மற்றோரு ஐரோப்பிய நாடு ஒப்புதல்!
இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு பயண அனுமதியளிக்க பெல்ஜியம் அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கோவிஷீல்ட்டுக்கு பயண அனுமதி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 15-வது நாடாக பெல்ஜியம் இடம் பெறுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, ஏற்கனவே ஸ்விட்சர்லாந்து உட்பட ஜேர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா, எஸ்டோனியா, பின்லாந்து, பல்கேரியா, அயர்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன், ஹெங்கேரி, லாட்வியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
அஸ்ட்ராஜெனேகாவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் இந்திய நிறுவனம் 'கோவிஷீல்டு' தயாரித்து வருகிறது.
பெல்ஜியம் அரசு கோவிஷீல்டை ஏற்றுக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு மிகவும் உதவக்கூடிய முடிவாக இருக்கும். வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளும் கோவிஷீல்டை சார்ந்துள்ளன என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது