மனித எச்சங்களால் நிரம்பி வழியும் மர்ம தீவு: சுமார் 1,60,000 பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாக சோகம்
இத்தாலியின் போவெக்லியா தீவில் கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்பு கூடுகளால் நிரம்பி வழிவதால் அங்கு மக்கள் செல்ல மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.
போவெக்லியா தீவு
இத்தாலியின் போவெக்லியா தீவு (Poveglia) மர்மங்கள் நிறைந்த தீவாக மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்த தீவு சபிக்கப்பட்ட தீவு என்று கூறப்படும் நிலையில், இங்கு சென்ற யாரும் திரும்பி வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த தீவுக்கு செல்லும் மக்களுக்கு இத்தாலிய அரசாங்கமும் உத்தரவாதம் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
மனித சடலங்கள்
இத்தாலியின் லிடோவுக்கும் வெனிஸ் நகருக்கும் இடையில் அமைந்துள்ள இந்த தீவு வெனிஸ் விரிகுடா என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவு முழுவதும் மனித எச்சங்களால் நிரம்பி காணப்படுகிறது.
பிளேக் நோய் பரவிய போது கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை இத்தாலிய அரசாங்கம் இந்த தீவுக்கு கொண்டு வந்து உயிருடன் எரித்ததாக வரலாறு சொல்லப்படுகிறது.
இந்த மர்ம தீவில் மருத்துவமனை ஒன்றும் இருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் அதுவும் விரைவில் மூடப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும் 1960 ஆண்டு இந்த தீவை பணக்காரர் ஒருவர் வாங்கியதாகவும், ஆனால் அவரும் அவருடைய குடும்பத்தினரும் சில விபத்துகளில் சிக்கி இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சபிக்கப்பட்ட தீவு என மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் வர தொடங்கியதில் இருந்து அந்த தீவுக்கு செல்வதை மக்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.
social media
social media