இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்
உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்
புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
கிட்டத்தட்ட 162 ஆளில்லா விமானங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு முனைகளில் இருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் திசைதிருப்பும் ஏமாற்று அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய பாதுகாப்பு படை டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், ரஷ்யா ஷாஹெட் ரக ட்ரோன்கள், கெர்பர் ரக ஏமாற்று ட்ரோன்கள், பரோடி ரக ட்ரோன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வான்வழித் தாக்குதல் ஆயுதங்கள் குர்ஸ்க், ஓரியல், பிரிமோர்ஸ்கோ - அக்தர்ஸ்க், ஹவார்திட்ஸ்கே மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவிய 162 ட்ரோன்களில் 134 ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இடைமறிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிய ட்ரோன்கள் 18 வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |