தைவானில் அத்துமீறி நுழைந்த சீன ஜெட் விமானங்கள்: உஷார் நிலையில் தைவான் ராணுவம்
- தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்த 17 சீன ஜெட் விமானங்கள்
- சீனாவின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து பதிலடி வழங்கப்படும்
தைவான் பிராந்தியத்தில் சுமார் 36 சீன ஜெட் விமானங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 17 ஜெட் விமானங்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து, அதனைக் கண்டிக்கும் விதமாக சீனா தைவானைச் சுற்றி இராணுவ பயிற்சியை அறிவித்தது.
இந்த இராணுவ பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், புதன்கிழமையான இன்று தைவான் பிராந்தியத்தில் 36 சீன ஜெட் விமானங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 17 ஜெட் விமானங்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
(Kyodo)
கூடுதல் செய்திகளுக்கு: 1 முதல் 9 வரையுள்ள பிரித்தானிய குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ்: அரசு முடிவு
சீனாவின் செயல்பாட்டை தைவான் ஆயுதப் படைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், சீன அத்துமீறல்களுக்கு தைவானின் விமானப்படை கடற்படை மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலளித்தன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.