பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் சிறப்பு தொழுகை: 17 கைதிகள் தப்பியோட்டம்
பக்ரீத் தொழுகையை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் கலவரம்
பக்ரீத் பண்டிகையை பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகர மத்திய சிறைச்சாலையில் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், சிறப்பு தொழுகையில் கைதிகள் பலர் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
PHOTO: INP
ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர், இதனை கண்டுபிடித்த சிறைக் காவலர்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் சிறைக் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது, அப்போது காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.
17 கைதிகள் தப்பியோட்டம்
இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர். இவர்கள் தப்பிப்பதற்கு சிறைக்கு வெளியில் இருந்து சிலர் உதவி இருப்பதாக உள்ளனர் என்றும், தப்பியோடியவர்களில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை அமைந்துள்ள சாமன் நகரானது ஈரான் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், கூட்டாளிகளின் உதவியுடன் அவர்கள் அங்கு தப்பித்து சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து தப்பியோடிய சிறைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் பாகிஸ்தான் பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |