சீனாவின் வசம் 17 வயது இந்திய சிறுவன்! ராணுவத்திடம் ஒப்படைத்த போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த Miram(17) என்ற சிறுவன் ஜனவரி 18ல் தொலைந்து போனதை தொடர்ந்து, அவர் சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரை நேற்று (வியாழக்கிழமை) Wacha-Damai என்ற இடத்தில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது சீனா.
அவரின் உடல்நலம் குறித்த ஆய்வுகள் மற்றும் கொரோனா பரிசோதனை போன்ற நடைமுறைகள் மேற்கொள்ள இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Miram(17) என்ற அருணாச்சல பிரதேச சிறுவன் ஜனவரி 18ல் தொலைந்து போனதை தொடர்ந்து, அவர் சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சீனாவின் People’s Liberation Army (PLA) இந்திய அரசிடம் தகவல் தெரிவித்தது.
அவர் Miram என்பதை உறுதி செய்வதற்காக அவரது நண்பர் Jony Yaying என்பவர் Kibithu என்ற ராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை சீனாவின் People’s Liberation Army (PLA) அவரை இந்திய ராணுவத்திடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
Miram(17) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் Zido கிராமத்திற்கு அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு வந்து சேர்ந்தனர்.
ஒரு வார காலம் சீன சிறைவாசத்திற்கு பிறகு தன தாயிடம் பேசிய Miram(17) கண்ணீர் விட்டு கதறினார்.
Miram தொலைந்து போனதில் இருந்து எங்களது குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், இப்போது Miram கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருவதாக இருப்பதாகவும் அவரது தந்தை Opang தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், Miram தொலைபேசியில் பேசியபோது தைரியமாக இருக்குமாறும், இனி வரும் காலங்களை உற்சாகமாக முன்னெடுத்து செல்லுமாறும் அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.
Miram இந்த ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டத்தை அடுத்து, இந்திய மத்திய அமைச்சர் Kiren Rijiju அதை தனது ட்விட்டர் தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பதிவில் '' Miram(17) சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீனா ஒப்படைத்து விட்டது. மருத்துவ பரிசோதனைகள் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுவனை பத்திரமாக மிட்டத்திற்காக இந்திய ராணுவத்துக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.