பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்! நெஞ்சை உருக்கும் பின்னணி
இங்கிலாந்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சுமார் 18 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்தியுள்ளது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் Megan Willis. இவருக்கு ஒரு வயதில் Edward என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy-யால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தசைக்கு கிடைக்கக்கூடிய போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததால் எழுந்து நிற்கக் கூட முடியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த குழந்தை படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்த குழந்தை தொடர்பான தகவல் வெளியான உடனே கிரௌட் ஃபண்டின் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியை வைத்து உலகிலேயே அதிக விலையுடைய Zolgensma ஊசியை வாங்கிய மருத்துவர்கள் அதனை அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட1 வயது குழந்தைக்கு செலுத்தியுள்ளார்கள்.
இதனின் விலை 18 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசியை மருத்துவர்கள் குழந்தைக்கு செலுத்திய பிறகு தன்னுடைய பிள்ளையும் மற்ற குழந்தைகளை போல் துள்ளி விளையாடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.