புடினை எச்சரிக்க கைகோர்த்த 19 நாடுகள்: துவக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நடவடிக்கை
பிரித்தானியா, அமெரிக்கா முதலான 19 நாடுகள் இணைந்து வடக்கு மாசிடோனியாவில் மிகப் பிரம்மாண்ட போர் ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டுள்ளன.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒருபக்கம் புடினுக்கு தங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவும், நேட்டோ அமைப்பில் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பின்லாந்துக்குக் காட்டுவதற்காகவும் இந்த போர் ஒத்திகைகள் துவக்கப்பட்டுள்ளன.
The Swift Response 22 என்று அழைக்கப்படும் இந்த போர் ஒத்திகையில், பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிற கூட்டணி நாடுகளின் 4,500 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த மாதம் இதேபோல் ஐரோப்பாவிலுள்ள ஐந்து இடங்களில் போர் ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன், Exercise Hedgehog என்னும் 18,000 நேட்டோ படையினர் கலந்துகொள்ளும் மிகப்பெரிய போர் ஒத்திகை ஒன்றும் எஸ்தோனியா - லாத்வியா எல்லையில் நடைபெற உள்ளது.
பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முறைப்படியான விண்ணப்பம் அளிக்கும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. அப்படி பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணையும் பட்சத்தில், ரஷ்யாவின் எல்லையில் இதுவரை 754 மைல்களில் நேட்டோ அமைப்பு நாடுகள் இருந்த நிலையில், இனி 1,584 மைல் தொலைவுக்கு நேட்டோ நாடுகள்தான் ரஷ்ய எல்லையில் இருக்கும். கிட்டத்தட்ட ரஷ்யாவை சுற்றி வளைப்பது போன்ற ஒரு விடயமாகும் இது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததாலேயே, நாளை இந்த புடின் நம் நாட்டின் மீதும் போ தொடுக்கக் கூடும் என்ற எண்ணத்தில் பின்லாந்து முதலான மேலும் சில நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.