வரலாற்றில் முதல்முறை - நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை நேரடியாக பார்த்த மனிதர்கள்
நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 பயணம்
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 குழுவினர் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கு
இந்நிலையில், நிலவில் உள்ள ஓரியண்டேல் பள்ளத்தாக்கை(orientale basin) பார்த்துள்ள முதல் மனிதர்கள் என்ற பெருமையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் பெற்றுள்ளனர்.
History in the making
— NASA (@NASA) April 5, 2026
In this new image from our @NASAArtemis II crew, you can see Orientale basin on the right edge of the lunar disk. This mission marks the first time the entire basin has been seen with human eyes. pic.twitter.com/iqjod6gqgz
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், நிலவில் பெரிய விண்கல் மோதியதில் உருவான பள்ளத்தாக்குகளிலேயே ஓரியண்டேல் பள்ளத்தாக்கு தான் மிகவும் இளமையானது என நம்பப்படுகிறது.
965 கிமீ அகலம் கொண்ட இந்த பள்ளத்தாக்கு நிலவின் மேற்குப்பகுதியில் விளிம்பில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை ஆளில்லா விண்கலங்களே இந்த பள்ளத்தாக்கை படம் பிடித்த நிலையில், முதல்முறையாக மனிதர்கள் தங்கள் கண்களால் பார்த்து இதனை படம் பிடித்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
This view just hits different 🌍
— NASA (@NASA) April 4, 2026
@Astro_Christina and @astro_reid take a moment to look back at Earth as they continue deep into space toward the Moon. pic.twitter.com/NMDeLj256K
மேலும், ஆர்டெமிஸ் 2 குழுவினர் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |