இத்தாலி கடற்கரையில் கவிழ்ந்த சூப்பர் படகு: 2 பிரிட்டிஷ் படகு குழு உறுப்பினர்களிடம் விசாரணை
சிசிலி கடற்கரையில் சூப்பர் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 2 பிரித்தானிய படகு குழுவினரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கடலில் கவிழ்ந்த சூப்பர் படகு
கடந்த வாரம் சிசிலி கடற்கரையில் கவிழ்ந்த பேய்சியன் சூப்பர் படகின்(Bayesian superyacht) இரண்டு பிரிட்டிஷ் குழு உறுப்பினர்களிடம் உள்ளூர் வழக்குரைஞர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
படகு விபத்துக்குள்ளான அன்றைய இரவு டிம் பார்க்கர் ஈடன்(Tim Parker Eaton) எஞ்சின் அறையின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான அன்றிரவு பொறுப்பில் இருந்த பார்க்கர் ஈடன் மற்றும் மத்தேயு கிரிஃபித்(Matthew Griffith) ஆகிய படகு குழு உறுப்பினர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், இருவரின் அறையிலும் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், மேலும் குறைந்தது 2 போன்களை கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையானது சூப்பர் படகின் கேப்டன் வழக்குரைஞரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததை தொடர்ந்து தொடங்கியுள்ளது.
51 வயதான நியூசிலாந்தை சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் கட்ஃபீல்ட்(James Cutfield) கொலை மற்றும் கப்பல் விபத்து குற்றச்சாட்டிற்காக விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 பேர் மரணம்
விபத்தின் போது மொத்தம் 22 பேர் வரை படகில் இருந்த நிலையில் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
துரதிஷ்டவசமாக பிரித்தானியாவின் தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் மற்றும் அவரது 18 வயது மகள் ஹன்னா உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |