8 மாதத்தில்... வரிசையாக 2 குழந்தைகளை பெற்ற பிரித்தானிய பெண்! எப்படி சாத்தியம்?
இங்கிலாந்தில் பெண் ஒருவர் 8 மாத இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் Lucy என்பவருக்கு முதல் குழந்தை பிறந்து 8 மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது. 27 வயதான அந்த பெண் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறந்து மூன்று மாதங்களாக அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. இதையடுத்து Lucy தனது மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கிய Lucy, வேறு வழியில்லாமல் இரண்டாவது குழந்தையை பெற்று கொள்ள சம்மதித்துள்ளார். முதல் குழந்தை பிறந்த பிறகு இவரும் இவரது கணவரும் உறவு கொண்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் Lucy தனது இரண்டாவது குழந்தையை 8 மாத இடைவெளியில் அதாவது குறை பிரசவத்தில் பெற்று எடுத்தார்.
முதல் குழந்தை பிறந்த 8 மாதத்திலேயே இரண்டாவது குழந்தையை ஒருவர் பெற்றெடுத்த விநோத சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியதோடு இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.