பிரபல நாட்டில் தொடரும் துயரம்! மின்வெட்டால் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் மரணம்!
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் மின்வெட்டால் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டன் தலைநகர் Amman-ல் உள்ள தனியார் மருத்துவமனையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறித்து தனியார் மருத்துவமனையை ஜோர்டான் அரசு வாடைக்கு எடுத்துள்ளது.
மின்னழுத்தம் காரணமாக மருத்துவமனைியல் மின்வெட்டு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மின்வெட்டால் மருத்துவமனை ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக ஜோர்டான் சுகாதார அமைச்சர் Firas Al-Hawari உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம் உறவினர்கள் மருத்துவமனைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜோர்டானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது நினைவுக் கூரத்தக்கது.