காசா ரஃபா நகரில் இஸ்ரேலிய தாக்குதல்: 67 பாலஸ்தீனர்கள் பலி., 2 பணயக்கைதிகள் மீட்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மீண்டும் அழிவுகரமானதாக மாறியுள்ளது.
இன்று, இஸ்ரேலியப் படைகள் (IDF) தெற்கு காசா நகரமான ரஃபாவைத் தாக்கின. அந்த வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனிர்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சுமார் 67 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Abdelhakim Abu Riash/Al Jazeera
ரஃபா நகரில் சுமார் 15 லட்சம் அகதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. நகரின் நடுவில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதியவர்களைக் காப்பாற்றினார்கள்.
Photograph: IDF Spokersperson HANDOUT/EPA
ரஃபாவைத் தாக்கும் திட்டத்தை சர்வதேச சமூகம் எதிர்த்தாலும், இஸ்ரேல் திட்டமிட்டபடி செய்தது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காஸா மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நடத்தியது.
அக்டோபர் 7ல் நடந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 253 பேர் கடத்தப்பட்டனர்.
இஸ்ரேலிய தாக்குதலில் 28,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |