இளவரசர் பிலிப் மரணத்தை கொண்டாட அரண்மனைக்கு வெளியே வந்து நின்ற நபர்கள்! கமெராவில் சிக்கிய காட்சி
இளவரசர் பிலிப் மரண செய்தியைக் கேட்டு, ஏராளமானோர் அரண்மனைக்கு வெளியே கூடியிருந்த நிலையில், அதில் இரண்டு பேர் அவர் மரணத்தை கொண்டாட்டத்திற்காக என்று கூறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் கணவரும், இளவரசருமான பிலிப் நேற்று உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு, ஏராளமான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு குவிந்தனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், பக்கிங்ஹாம் அரணமனைக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். அதில் இரண்டு பேர் சைக்கிளில் வந்த படி Prosecco-வை கையில் வைத்திருந்தனர்.
இதைக் கவனித்த நபர் ஒருவர், அவர்களை நோக்கி சென்று, நீங்கள் இதை இங்கு திறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல, அதற்கு அந்த இருவரும் இல்லை, இல்லை என்று கூறுகின்றனர்.
உடனே அந்த நபர், இது அரணமனைக்கு வெளியே இப்படி செய்வது அவமரியாதைக்குரியது என்று கூற, உடனே அந்த இரண்டு ஆண்களில் ஒருவர், மரண கொண்டாட்டத்திற்காக நாங்கள் இருப்பதாக கூறினார்.
மீண்டும் அவர்கள் வீடியோ எடுக்கிறீர்களா? அப்படி எடுத்தால் அந்த வீடியோவை நிறுத்துங்கள் என்று கூறுகிறார்கள்.
அதற்கு அவரோ, நீங்கள் இந்த பாட்டில்களை திறக்காவிட்டால், வீடியோ பதிவு செய்வதை நிறுத்துவதாக கூறுகிறார்.
உடனே அந்த இரண்டு பேரும், அங்கிருக்கும் சைக்கிளில் புறப்பட்டு செல்கின்றனர்.