ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம்: 2 டீன் ஏஜ் இளைஞர் கைது
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞர்கள் 2 பேர் கைது
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு டீன் ஏஜ் இளைஞர்களை ஜேர்மன் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வயது வராத இரண்டு இளைஞர்களும் தங்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என கருதி கொண்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
X
டீன் ஏஜ் இளைஞர்கள் இரண்டு பேரும் ஜேர்மனியில் நடைபெற இருந்த கிறிஸ்துமஸ் கண்காட்சியிலோ அல்லது கொலோனில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றிலோ பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்காக அவர்கள் மோலோடோவ் காக்டெய்ல்(Molotov cocktails) மற்றும் சிறிய ரக லொறி ஒன்றையும் தயார் படுத்திக் கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |