இஸ்ரேல் காசா போர்: இஸ்ரேல் தாக்குதலில் ரஃபாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் துவங்கி நேற்றுடன் 200 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,000ஐக் கடந்துள்ளதாக காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல்
இஸ்ரேல், ரஃபா பகுதியைக் குறிவைத்துள்ள நிலையில், ரஃபாவிலிருக்கும் ஹமாஸ் குழுவினருக்கெதிராக தாக்குதல் நடத்துவதற்காக, அப்பகுதியில் வாழும் பொதுமக்களை வெளியேற்ற திட்டமிட்டுவருவதாக திங்கட்கிழமை எகிப்து அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், ரஃபாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில், வீடு ஒன்றின்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |