க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலங்கையின் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 35,000 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில், க.பொ.த சாதாரண பரீட்சை நிறைவடைந்த இரண்டாம் வாரத்திலேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டமானது நடைமுறைக்கு வரவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |