மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு - இவர்கள் சாதித்தது என்ன?
2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2025 மருத்துவத்திற்கான நோபல் பரிசு
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow) பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி(Shimon Sakaguchi) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2025
The 2025 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Mary E. Brunkow, Fred Ramsdell and Shimon Sakaguchi “for their discoveries concerning peripheral immune tolerance.” pic.twitter.com/nhjxJSoZEr
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரிசு ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |