22 சிறுபிள்ளைகள் உயிரிழப்பு: புலம்பெயர்தல் தொடர்பில் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரான்சில் 22 சிறுபிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
22 சிறுபிள்ளைகள் உயிரிழப்பு
பிரான்ஸ் தரப்பில், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சிறுபடகுகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், உயிரிழந்தவர்களில் 22 பேர் சிறுபிள்ளைகள் என Project Play என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு பிரான்சில் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது, சிறுபடகுகளைக் கத்தியால் கிழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அந்த காலகட்டத்தில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற 22 சிறுபிள்ளைகள் உயிரிழந்ததாக Project Play என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுமே சிறுபிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் படுதோல்வி அடைந்துள்ளன என்பது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறும் அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த Katie Hall என்பவர், அடிப்படை வசதிகள் கூட சிறுபிள்ளைகளுக்கு மறுக்கப்படுவதன் காரணமாக நாள்தோறும், கடற்கரைகள் மற்றும் தங்குமிடங்களில், சிறுபிள்ளைகள் தொடர்ந்து வன்முறையை எதிர்கொள்வதை தாங்கள் காண்பதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், உயிரிழந்த அந்த 22 பிள்ளைகளை நினைவுகூரும் வகையில் லண்டன் மற்றும் லீட்ஸ் ஆகிய நகரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Project Play தொண்டு நிறுவனம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |