காதல் முறிவை தாங்காத காதலன்: இத்தாலியில் கல்லூரி மாணவியை குத்திக் கொன்ற இளைஞர்
இத்தாலியில் 22வயது கல்லூரி மாணவி ஹூலியா சியோஷெத்தினை அவரது முன்னாள் காதலன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனின் வெறிச் செயல்
இத்தாலியின் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழக்கத்தில் இறுதியாண்டு பயோமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்(22) மற்றும் பிலிப்போ டுரிடா(22) இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் திகதி ஹூலியா தனது பட்டமளிப்பு விழாவிற்காக புதிய ஆடை வாங்க வணிக வளாகத்திற்கு சென்று இருந்த நிலையில், ஆள் நடமாட்டமற்ற ஏரிக்கரையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு இறந்து கிடந்தார்.
இதற்கிடையில் ஹுலியாவை காணவில்லை என பொலிஸில் அவரது பெற்றோர் புகார் அளித்து இருந்த நிலையில், பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது ஹுலியாவின் வீட்டிற்கு அருகே அவரது முன்னாள் காதலன் பிலிப்போவின் கார் வந்ததையும், அதில் ஹுலியா கடத்திச் சென்றதையும் கண்டுபிடித்தனர்.
மேலும் காரில் வைத்து ஹுலியாவை அவரது முன்னாள் காதலன் பிலிப்போ தாக்கியதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அத்துடன் ஆள்நடமாட்டம் இல்லாத ஏரிக்கரைக்கு ஹுலியாவை கடத்தி சென்று, அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து உடலை ஏரிக்கரையிலேயே வீசி சென்றுள்ளார்.
இதையடுத்து தப்பிச்சென்ற காதல் பிலிப்போவை கிழக்கு ஜேர்மனி சாலைப் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |