25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

Pakistan India Operation Sindoor
By Thiru May 07, 2025 09:45 AM GMT
Report

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்துர்

நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த மின்னல் வேக தாக்குதல் நடத்தப்பட்டது.

வெறும் 25 நிமிடங்களில் 24 அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த துல்லியமான தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு "ஆபரேஷன் சிந்துர்"(Operation Sindoor) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி தாக்குதல் நேற்று அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நடைபெற்றது.

இந்தியா விளக்கம்

புது டெல்லியில் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர்.

ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு "நிதானமான ஆனால் அதே நேரத்தில் தகுந்த பதிலடியாக" இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி | 25 Minutes 24 Missiles India Decimates Pakistan

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு நேபாளி நாட்டவர் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை இந்திய ராணுவத்தின் போர் வியூகத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எங்களது துல்லியமான உளவுத்துறை தகவல்கள் எச்சரித்தன.

ஆகையால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கவும், முறியடிக்கவும் வேண்டியது இந்தியாவின் கட்டாயமாக இருந்தது.

இதன் காரணமாகவே இன்று அதிகாலை இந்தியா தனது பதிலடி உரிமையை மிகத் துல்லியமாக பயன்படுத்தியது.

எங்களது இந்த நடவடிக்கைகள் மிகவும் நிதானமானவை, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்காதவை, அதே நேரத்தில் விகிதாசாரமானவை மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

பயங்கரவாதிகளின் கட்டமைப்பை முழுமையாக அழிப்பதிலேயே எங்கள் கவனம் முழுமையாக இருந்தது," என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மேலும் உறுதியளித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்; 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?

ஆபரேஷன் சிந்தூர்; 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?

தாக்குதல் நடத்தப்பட்ட முக்கிய இடங்கள்

இந்தியாவின் இந்த அதிரடி ஏவுகணை தாக்குதல்கள் பாகிஸ்தானின் முக்கியமான பயங்கரவாத மையங்களான முசாபராபாத், கோட்லி, பஹவல்பூர், ராவல்கோட், சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜேலம் மற்றும் சக்வால் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கின.

இந்த பகுதிகள் பல ஆண்டுகளாக சர்வதேச உளவுத்துறை அமைப்புகளால் பயங்கரவாத முகாம்களின் மையமாக சந்தேகிக்கப்பட்டு வந்தன.

இந்த பயங்கரவாத தளங்கள் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) போன்ற கொடூரமான பயங்கரவாத குழுக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தன.

இந்த குழுக்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு நாசகார தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன. தாக்கப்பட்ட இந்த ஒன்பது பயங்கரவாத இலக்குகளில் ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், மீதமுள்ள நான்கு பாகிஸ்தான் நாட்டிற்குள்ளும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிட்ட இலக்குகளை துல்லியமாக அடைந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிநவீன ஆளில்லா விமானங்களின் (UAV) மூலம் பெறப்பட்ட தெளிவான உளவு படங்கள், பயங்கரவாத கட்டளை மையங்கள், பயங்கரவாத பயிற்சி முகாம்கள், பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் தற்காலிக செயல்பாட்டு தளங்கள் ஆகியவை முழுமையாக அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாகிஸ்தானின் எந்த ஒரு இராணுவ இலக்கும் தவறாக கூட குறிவைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் மூலம் ஏற்பட்ட சேதத்தின் அளவு

இந்தியாவின் இந்த துல்லியமான தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உடனடியாக கொல்லப்பட்டனர், மேலும் 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி | 25 Minutes 24 Missiles India Decimates Pakistan

இந்த அதிரடி தாக்குதல்களுக்கு தரைவழி ஏவுகணைகள் மற்றும் வான்வழி ஏவுகணைகள் என அதிநவீன ஏவுகணைகளின் கலவை பயன்படுத்தப்பட்டது.

அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் நிகழ்நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பயங்கரவாத இலக்குகள் துல்லியமாக அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லேசர் மூலம் துல்லியமாக குறிவைக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் வழிநடத்தப்படும் வான்வழி வெடிகுண்டுகள் உள்ளிட்ட அதிநவீன துல்லிய இலக்கு ஆயுதங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US