15 வயது சிறுமியை பூங்காவுக்கு அழைத்து வந்து சீரழித்த 25 வயது இளைஞன்! சினிமா பாணியில் நள்ளிரவில் துரத்தி பிடித்த பொலிஸார்
அமெரிக்காவில் 15 வயது சிறுமியை பூங்காவுக்கு அழைத்து வந்து பாலியல் தாக்குதல் நடத்தி சீரழித்த இளைஞனை சினிமா பாணியில் துரத்தி பொலிசார் பிடித்துள்ளனர்.
லிங்கோல்மஒ சேர்ந்தவர் அகமது பக்லுலி (25). இவர் கடந்த நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை தன்னுடன் பூங்காவிற்கு அழைத்து வந்தார்.
பின்னர் சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார்.
அவரை பிடிக்க முடியாமல் பொலிசார் திணறிய நிலையில் சமீபத்தில் அகமது இருக்கும் இடம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு பொலிசார் வருவதை அறிந்த அகமது தனது காரை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார்.
ஆனால் அவரை விடாத பொலிசார் சினிமா பாணியில் நள்ளிரவு 2.30 மணிக்கு அகமதை துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது, மேலும் அகமதிடம் இருந்து கொக்கைன் போதை மருந்துகளை பொலிசார் கைப்பற்றினார்கள்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் வேறு பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.