பிரித்தானியா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞர்! எதற்காக தெரியுமா? வெளியான காரணம்
பிரித்தானியாவில் விமான நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Buckinghamshire-ல் உள்ள High Wycombe-ஐ சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் இன்று Heathrow விமானநிலையத்தில் திடீரென்று அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் கைது செய்யப்பட்ட இளைஞர் இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படுவதாகவும், இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயங்கரவாத செயல்களுக்கு குற்றங்கள் செய்ய தயாராக இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருப்பது மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே, பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார், கைது செய்து அவரிடம் விசாரணையை துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, பிரித்தானியா மிகப் பெரிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் முன்னாள் தளபதி கர்னல் ரிச்சர்ட் கெம்ப், பிரித்தானியா தற்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று கூறியிருந்தார்.
ஏனெனில், தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டதால், மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அச்சுறுத்துவதோ, சதித்திட்டம் தீட்டுவதற்கு அமைந்துவிட்டதாக எச்சரித்துள்ளார்.